Thursday, September 11, 2008

சகாயவிலையில் SIP கால்கள்

ay, September 10, 2008

சகாயவிலையில் SIP கால்கள்

இப்பொழுதும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கால் செய்ய இன்டியாக்கால்" இன்னும் அநியாய கட்டணமே வசூலித்துக் கொண்டிருக் கின்றார்கள். நிமிடத்திற்கு 7.9¢.அதுவும் ஒவ்வொரு முறையும் ஐ.எஸ்.டி முழுநம்பரையும் நாம் டைப் செய்ய வேண்டும்.

டெல்லை பற்றி கேள்விப்பட்டவுடன் பின்பு அதற்கு தாவலானேன். இவர்கள் நிமிடத்திற்கு 5.6¢ வசூலிக்கின்றார்கள். ஒவ்வொரு இந்திய நம்பருக்கும் ஒரு அமெரிக்க லோக்கல் போன் நம்பரை இவர்கள் நியமித்து நமக்கு தந்து விடுவதால் போன் Contacts-யிலிருந்து நேரடியாகவே அந்த லோக்கல் நம்பர் டையல் செய்து இந்தியா பேசலாம்.இப்படி சமீபத்தில் டெல்லி நண்பன் ஒருவனையும் துபாய் நண்பன் ஒருவனையும் Conference call-ல் இழுத்து ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

ஆனால் அயல்நாட்டிலும் இந்தியாவிலும் அகலப்பட்டை இணைய இணைப்புகள் வைத்திருபவர்களுக்கு கொண்டாட்டம் தான். விடிய விடிய நயா பைசா செலவில்லாமல் கதைத்துக்கொண்டே இருக்க முடியும். இன்றைய நிலையில் இந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டுமே அகலப்பட்டை வசதிகள் உள்ளன. நகரத்தை விட்டு தூரச்செல்லச் செல்ல அகலப்பட்டை கிடைப்பது அரிதாயிருக்கின்றது.

இது போன்று புறநகரின் ஒரு மூலையில் இணைய இணைப்பின்றி மாட்டிக்கொண்டோரிடம் பேசவும் ஒரு விஓஐபி(VOIP) தீர்வு இருக்கின்றது. உங்களுக்கு தேவை இங்கு அக்கரை சீமையில் இன்டர்நெட் டேட்டா பிளானுடன் கூடிய ஒரு நல்ல WiFi கைப்பேசியும் அதில் fring அல்லது Gizmo போன்றதொரு VOIP மென்பொருளும். Callcentric போன்ற ஏதாவதொரு சகாயவிலை SIP சேவை தருபவர்களிடம் ஒரு கணக்கு ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் செட்டிங்குகளை அந்த மென்பொருளில் செய்துவிட்டால் நிமிடத்திற்கு $0.0715 கட்டணத்தில் இந்திய தரை தொலைபேசிகளுக்கும் நிமிடத்திற்கு $0.0649 கட்டணத்தில் இந்திய கைபேசிகளுக்கும் நாம் பேசலாம்.

உங்கள் போன் மாடலுக்குத் தகுந்த fring அல்லது Gizmo மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கைப்பேசியில் நிறுவவேண்டும். Callcentric தரும் SIP Proxy settings-களையும் இன்னபிற செட்டிங்குகளையும் சரியாய் அதில் குறிக்க வேண்டும். அப்புறமென்ன இன்னும் சீப்பாக நம் கிராமங்களுக்கும் நாம் பேசலாம்.

சீக்கிரத்தில் நம் ஊர்புறங்களுக்கும் கூட இந்த இணையம் வரும். அப்பொழுது உலகம் கணக்குவழக்கின்றி இன்னும் சுருங்கிப் போயிருக்கும்.

Wednesday, September 10, 2008

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

சோனி (Sony) அவ்வப்போது அட்டகாசமான கருவிகளோடு மார்க்கெட்டில் வருவது அவர்கள் பொழுதுபோக்கு. தனக்கே உரித்தான நவீன தொழில்நுட்பங்கள், தரம் என அசத்திவருவது உலகறியும். இப்போது இன்னொரு புரட்சிபடைக்கும் பெட்டியோடு வந்திருக்கிறார்கள். Sony Reader ஈ புக் ரீடர்.ஈ புத்தகங்களை படிப்பது முன்னெப்போதும் இல்லாதபடி இனி மிக எளிதாகப் போகின்றது. இன்றைய நிலையில் இந்த மென் புத்தகங்களை (E books) படிக்க மேஜை கணிணி அல்லது மடிக்கணிணியில் உட்கார்ந்து படிக்க வேண்டும்.அது boot ஆகி அப் ஆகி படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மேலும் 8 மணி நேர வேலை போக படிக்கவும் கணிணியா-..னு வெறுப்பு வேறு. இதோ ஒரு கையடக்க கருவி சாதாரண காகித புத்தகம் போல மென்,மின் புத்தகங்களை படிக்க உதவுகின்றது.பஸ்ஸில் ஏறி பட்டென திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம்.7,500 பக்கங்களை இன்னொரு முறை ரீசார்ஜ் செய்யாமல் முழுதுமாய் படித்து விடலாமாம்.மேலும் ஒரு நூலக புத்தகங்களை இதில் உள்ள டிஸ்கில் சேமித்து வைத்துகொள்ளலாம். சாதாரண புத்தகம் போலவே பக்கங்களை புரட்டி புரட்டி படிக்கவேண்டுமாம்.முக்கியமாய் இது கணிணி மானிட்டர் போல் CRT-யோ அல்லது மடிக்கணிணி போல் LCD technology-யோ பயன்படுத்தாமல் e Ink-னு ஒரு
நுட்பம் பயன்படுத்துவதால் கண்ணுக்கு இது காகிதத்தில் படிப்பது போலவே தோன்றுமாம்.நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது துளி கூட மின்சாரம் பயன்படுத்தாது என்பது இன்னொரு ஆச்சர்ய விஷயம்.ஓ மறந்துட்டேன் MP3 பாடல்களையும் இது கொள்வதால் இனிய இசை கேட்டுக்கொண்டே படிக்கலாமாம் போங்கள்.காகித நாவல்களை சுமப்பது போய் இனி இந்த சிலேட்டை அனைவரும் சுமந்து கொண்டு திரிவதை சீக்கிரத்தில் பார்க்கலாம்.