![]() |
Tuesday, June 24, 2008
Monday, June 23, 2008
Sunday, June 22, 2008
15 years no leave
ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கோவை அவிலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். மேல்நிலை படிப்பை ராசிபுரம் எஸ்.ஆர்.வி., மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி விடுமுறை நாட்கள் தவிர வேறு விடுப்பு எடுக்கவில்லை. ப்ளஸ் 2 தேர்வில் 1152 மார்க் பெற்றார். மருத்துவக் கல்விக்கு முயற்சித்தார். நுழைவுத்தேர்வில் 0.5 கட் ஆப் மார்க் குறைவாக இருந்ததால், மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இன்ஜினியரிங் கல்லூரியிலும் இதுவரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். அவரது சாதனை குறித்து கேள்விப்பட்ட, மாநில கைத்தறி துறை அமைச்சர் ராஜா, மொடக்குறிச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகிய இருவரும் மாணவியின் வீட்டுக்கு நேற்று காலை சென்றனர். மாணவியை வெகுவாக பாராட்டினர்.
மாணவி சரண்யா கூறியதாவது : என் தந்தை பணி காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்தார். இருப்பினும், நான் என் பாட்டி, தாத்தாவுடன் தங்கி படித்தேன். ஆரம்பக் கல்வி கற்கும் போது, விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என சிந்திக்கும் அளவுக்கு பக்குவம் இல்லை. எனது தாய் தான் என்னை விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அதன் பின் என் தாயின் கனவை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து கல்லூரி மூன்றாம் ஆண்டு வரை, எவ்வளவோ இடர்பாடுகள் வந்த போதும் விடுப்பு எடுக்கவில்லை. என் பாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எனக்கு பிளஸ் 2 தேர்வு நடந்தது. அது குறித்து என் பெற்றோர் என்னிடம் ஏதும் கூறாமல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு சரண்யா கூறினார்.
23.06.2008 kapil is the great
Tuesday, October 2, 2007
ஒரு லட்ச ரூபாயில் கார்!

