Thursday, September 11, 2008

சகாயவிலையில் SIP கால்கள்

ay, September 10, 2008

சகாயவிலையில் SIP கால்கள்

இப்பொழுதும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கால் செய்ய இன்டியாக்கால்" இன்னும் அநியாய கட்டணமே வசூலித்துக் கொண்டிருக் கின்றார்கள். நிமிடத்திற்கு 7.9¢.அதுவும் ஒவ்வொரு முறையும் ஐ.எஸ்.டி முழுநம்பரையும் நாம் டைப் செய்ய வேண்டும்.

டெல்லை பற்றி கேள்விப்பட்டவுடன் பின்பு அதற்கு தாவலானேன். இவர்கள் நிமிடத்திற்கு 5.6¢ வசூலிக்கின்றார்கள். ஒவ்வொரு இந்திய நம்பருக்கும் ஒரு அமெரிக்க லோக்கல் போன் நம்பரை இவர்கள் நியமித்து நமக்கு தந்து விடுவதால் போன் Contacts-யிலிருந்து நேரடியாகவே அந்த லோக்கல் நம்பர் டையல் செய்து இந்தியா பேசலாம்.இப்படி சமீபத்தில் டெல்லி நண்பன் ஒருவனையும் துபாய் நண்பன் ஒருவனையும் Conference call-ல் இழுத்து ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

ஆனால் அயல்நாட்டிலும் இந்தியாவிலும் அகலப்பட்டை இணைய இணைப்புகள் வைத்திருபவர்களுக்கு கொண்டாட்டம் தான். விடிய விடிய நயா பைசா செலவில்லாமல் கதைத்துக்கொண்டே இருக்க முடியும். இன்றைய நிலையில் இந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டுமே அகலப்பட்டை வசதிகள் உள்ளன. நகரத்தை விட்டு தூரச்செல்லச் செல்ல அகலப்பட்டை கிடைப்பது அரிதாயிருக்கின்றது.

இது போன்று புறநகரின் ஒரு மூலையில் இணைய இணைப்பின்றி மாட்டிக்கொண்டோரிடம் பேசவும் ஒரு விஓஐபி(VOIP) தீர்வு இருக்கின்றது. உங்களுக்கு தேவை இங்கு அக்கரை சீமையில் இன்டர்நெட் டேட்டா பிளானுடன் கூடிய ஒரு நல்ல WiFi கைப்பேசியும் அதில் fring அல்லது Gizmo போன்றதொரு VOIP மென்பொருளும். Callcentric போன்ற ஏதாவதொரு சகாயவிலை SIP சேவை தருபவர்களிடம் ஒரு கணக்கு ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் செட்டிங்குகளை அந்த மென்பொருளில் செய்துவிட்டால் நிமிடத்திற்கு $0.0715 கட்டணத்தில் இந்திய தரை தொலைபேசிகளுக்கும் நிமிடத்திற்கு $0.0649 கட்டணத்தில் இந்திய கைபேசிகளுக்கும் நாம் பேசலாம்.

உங்கள் போன் மாடலுக்குத் தகுந்த fring அல்லது Gizmo மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கைப்பேசியில் நிறுவவேண்டும். Callcentric தரும் SIP Proxy settings-களையும் இன்னபிற செட்டிங்குகளையும் சரியாய் அதில் குறிக்க வேண்டும். அப்புறமென்ன இன்னும் சீப்பாக நம் கிராமங்களுக்கும் நாம் பேசலாம்.

சீக்கிரத்தில் நம் ஊர்புறங்களுக்கும் கூட இந்த இணையம் வரும். அப்பொழுது உலகம் கணக்குவழக்கின்றி இன்னும் சுருங்கிப் போயிருக்கும்.

Wednesday, September 10, 2008

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

சோனி (Sony) அவ்வப்போது அட்டகாசமான கருவிகளோடு மார்க்கெட்டில் வருவது அவர்கள் பொழுதுபோக்கு. தனக்கே உரித்தான நவீன தொழில்நுட்பங்கள், தரம் என அசத்திவருவது உலகறியும். இப்போது இன்னொரு புரட்சிபடைக்கும் பெட்டியோடு வந்திருக்கிறார்கள். Sony Reader ஈ புக் ரீடர்.ஈ புத்தகங்களை படிப்பது முன்னெப்போதும் இல்லாதபடி இனி மிக எளிதாகப் போகின்றது. இன்றைய நிலையில் இந்த மென் புத்தகங்களை (E books) படிக்க மேஜை கணிணி அல்லது மடிக்கணிணியில் உட்கார்ந்து படிக்க வேண்டும்.அது boot ஆகி அப் ஆகி படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மேலும் 8 மணி நேர வேலை போக படிக்கவும் கணிணியா-..னு வெறுப்பு வேறு. இதோ ஒரு கையடக்க கருவி சாதாரண காகித புத்தகம் போல மென்,மின் புத்தகங்களை படிக்க உதவுகின்றது.பஸ்ஸில் ஏறி பட்டென திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம்.7,500 பக்கங்களை இன்னொரு முறை ரீசார்ஜ் செய்யாமல் முழுதுமாய் படித்து விடலாமாம்.மேலும் ஒரு நூலக புத்தகங்களை இதில் உள்ள டிஸ்கில் சேமித்து வைத்துகொள்ளலாம். சாதாரண புத்தகம் போலவே பக்கங்களை புரட்டி புரட்டி படிக்கவேண்டுமாம்.முக்கியமாய் இது கணிணி மானிட்டர் போல் CRT-யோ அல்லது மடிக்கணிணி போல் LCD technology-யோ பயன்படுத்தாமல் e Ink-னு ஒரு
நுட்பம் பயன்படுத்துவதால் கண்ணுக்கு இது காகிதத்தில் படிப்பது போலவே தோன்றுமாம்.நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது துளி கூட மின்சாரம் பயன்படுத்தாது என்பது இன்னொரு ஆச்சர்ய விஷயம்.ஓ மறந்துட்டேன் MP3 பாடல்களையும் இது கொள்வதால் இனிய இசை கேட்டுக்கொண்டே படிக்கலாமாம் போங்கள்.காகித நாவல்களை சுமப்பது போய் இனி இந்த சிலேட்டை அனைவரும் சுமந்து கொண்டு திரிவதை சீக்கிரத்தில் பார்க்கலாம்.

Monday, June 23, 2008

test

Hello Bavi how are u nan inku nalam nee home work complete panniyacha.

Sunday, June 22, 2008

15 years no leave

ரோடு : பள்ளி, கல்லூரிக்கு 15 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் சாதனை புரிந்த ஈரோட்டை சேர்ந்த கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை,அமைச்சர் ராஜா பராட்டினார். ஈரோடு திண்டலை சேர்ந்தவர் சக்திவேல். பாசூர் கனரா வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். அவருக்கு சரண்யா, நிரஞ்சனா என இரு மகள்கள். மாணவி சரண்யா கோவை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அவர், ஆரம்ப பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து இப்போது கல்லூரி படிப்பு வரை 15 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பே எடுத்ததில்லை என்பதுதான் சாதனை.

ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கோவை அவிலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். மேல்நிலை படிப்பை ராசிபுரம் எஸ்.ஆர்.வி., மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி விடுமுறை நாட்கள் தவிர வேறு விடுப்பு எடுக்கவில்லை. ப்ளஸ் 2 தேர்வில் 1152 மார்க் பெற்றார். மருத்துவக் கல்விக்கு முயற்சித்தார். நுழைவுத்தேர்வில் 0.5 கட் ஆப் மார்க் குறைவாக இருந்ததால், மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இன்ஜினியரிங் கல்லூரியிலும் இதுவரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். அவரது சாதனை குறித்து கேள்விப்பட்ட, மாநில கைத்தறி துறை அமைச்சர் ராஜா, மொடக்குறிச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகிய இருவரும் மாணவியின் வீட்டுக்கு நேற்று காலை சென்றனர். மாணவியை வெகுவாக பாராட்டினர்.



மாணவி சரண்யா கூறியதாவது : என் தந்தை பணி காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்தார். இருப்பினும், நான் என் பாட்டி, தாத்தாவுடன் தங்கி படித்தேன். ஆரம்பக் கல்வி கற்கும் போது, விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என சிந்திக்கும் அளவுக்கு பக்குவம் இல்லை. எனது தாய் தான் என்னை விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அதன் பின் என் தாயின் கனவை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து கல்லூரி மூன்றாம் ஆண்டு வரை, எவ்வளவோ இடர்பாடுகள் வந்த போதும் விடுப்பு எடுக்கவில்லை. என் பாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எனக்கு பிளஸ் 2 தேர்வு நடந்தது. அது குறித்து என் பெற்றோர் என்னிடம் ஏதும் கூறாமல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு சரண்யா கூறினார்.

23.06.2008 kapil is the great

புதுடில்லி: உலக கோப்பை வென்ற "கபில் டெவில்ஸ்' அணியினர் நேற்று டில்லியில் ஒன்று கூடினர். தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட இவர்கள் மிகவும் உணர்ச்சிமயமாக காணப்பட்டனர். கடந்த 1983ல் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பை வென்றது. இதன் "வெள்ளி விழா' கொண்டாட்டம் ..

Tuesday, October 2, 2007

ஒரு லட்ச ரூபாயில் கார்!

டாடாவின் ஒரு லட்ச ரூபாய் கார் கனவு, இந்தியாவில் பல நடுத்தர குடும்பங்களுக்கு நனவாகப் போகிறது. இந்த கார் எப்படியிருக்கும்? என்ற கற்பனை, கார் வாங்க விரும்புவோருக்குள் இப்போதே சிறகடிக்கத் தொடங்கியிருக்கும். அடிப்படையில் ஒரு மோட்டார் பைக்கில் செய்யக் கூடிய தொழில்நுட்பத்தைக் காட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும். காரின் கட்டமைப்பு உறுதியுடனும், நான்குபேர் அமரக் கூடிய வகையிலும் இந்த கார் இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. உயர்ந்த சீட்டுகளை அமைத்து, உள்பகுதியில் அதிக இடவசதி இருக்கும். எளிமையாகவும், எளிதாகவும் இருக்க பின் பகுதியில் இன்ஜின் இருக்கும். நகரின் குறுகிய ரோடுகளில் வளைந்து நெளிந்து செல்ல இக்கார் உதவுவதோடு, எரிபொருள் சிக்கனமும் இருக்கும்.இரட்டை சிலிண்டர், 30 பிஎச்பி திறன் வாய்ந்த இன்ஜின் அமைந்திருக்கும். 'சிவிடி' கியர் பாக்ஸ்சுடன் பின் பக்க சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும். டாடா மோட்டார் நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் கார் தயாரிக்க அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கான வடிவமைப்பில் இன்ஜினியர்கள் இறங்கி விட்டனர். எதை, எங்கெங்கு குறைக்கலாம்...உற்பத்தி செலவு எங்கு குறையும், எந்த இடத்தில் சிக்கனத்தை பயன்படுத்தலாம், உறுதி தன்மையை உயர்த்த வேண்டிய பகுதிகள் என அலசி ஆராய்ந்தனர். தொழில்நுட்ப ரீதியாக சிக்கனமும், அதேசமயம் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களையும் ஏற்படுத்த திட்டமிட்டனர். பாஷ் நிறுவனம், புதிதாக தயாரித்துள்ள நவீன தொழில்நுட்பத்திலான எரிபொருள்'இன்ஜெக்ஷன்' சிஸ்டம் இதில் அறிமுகமாகிறது.இந்த டாடா இன்டிகா 'சூப்பர் மினி' கார், ஜனவரியில் காட்சி பொருளாக இருக்கும். எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என ஆவலோடு கார் நிபுணர்கள் காத்திருக்கின்றனர்.டில்லி, பிரகதி மைதானத்தில் 2008 ஜனவரியில் நடக்கும் கண்காட்சியில் இந்த கார் இடம் பெற வேண்டும் என கார் வாங்குவோர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன், இதே எதிர்பார்ப்பை டாடா இன்டிகா கார் ஏற்படுத்தியது. பிற கார்களை விட அடக்க ஒடுக்கமாக, உள்ளே அதிக இடவசதி உள்ளதாக அறிமுகப்படுத்தப்பட்டது இன்டிகா. அமோக வரவேற்பை ஏற்படுத்திய இந்தக் காரை போன்றே, ஒரு லட்ச ரூபாய் காரும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.